PDF chapter test TRY NOW
அழகிற்காக வளர்க்கப்படும் தாவரங்கள் அலங்காரத் தாவரங்கள் எனப்படும். ஒரு குறிப்பிட்ட தாவரங்களில் இருந்து மலர்களை நாம் பெறுகிறோம். இத்தகைய மலர்களை வளர்ப்பது மலர் வளர்ப்பு தோட்டக்கலையின் முக்கியப் பகுதியாக செயல்படுகிறது.
Example:
மல்லிகை, ரோஜா, செவ்வந்தி, கார்னேஷன், ஜெர்பரா
மேலும் வீடுகள், தோட்டங்கள் மற்றும் பூங்காக்கள் போன்ற அனைத்து இடங்களிலும் அழகாக காட்சி படுத்த அனைத்து வகையான அலங்காரத் தாவரங்களும் வளர்க்கின்றன.
எந்தெந்த அலங்காரத் தாவரங்கள் வளர்க்கப்படுகிறது என்பதை பின்வருமாறு காணலாம்:
i. செம்பருத்தி, நந்தியாவட்டை, குரோட்டன்ஸ் போன்றவை பெரிய செடி வகைகள் ஆகும்.
![hibiscus1583078960720w958.jpg](https://resources.cdn.yaclass.in/ca9eb700-f469-4a08-a806-48fe12b7b3af/hibiscus1583078960720w958w300.jpg)
செம்பருத்தி
ii. முல்லை, அலமான்டா, காகிதப்பூ போன்றவை கொடி வகைகள் ஆகும்.
![flowers11131960720w958.jpg](https://resources.cdn.yaclass.in/1dc6104d-a985-41f8-8283-1af344c3eacf/flowers11131960720w958w300.jpg)
காகிதப்பூ
iii. டிலோனிக்ஸ் மரம் (காட்டுத்தீ) ஆகிய மரவகை ஆகும்.
![cassiafistula7731761280.jpg](https://resources.cdn.yaclass.in/00f5b541-c76b-48f4-9abb-b38682042010/cassiafistula7731761280w300.jpg)
காட்டுத்தீ
உங்கள் பகுதியில் என்னென்ன அலங்காரத் தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன?
செம்பருத்தி, நந்தியாவட்டை, குரோட்டன்ஸ், முல்லை, காகிதப்பூ, மந்தாரை போன்ற அனைத்து வகையான அலங்காரத் தாவரங்களும் வளர்க்கப்படுகிறது.
Reference:
https://www.flickr.com/photos/guojerry/7267496528