PDF chapter test TRY NOW
கீழே கொடுக்கப்பட்ட படங்களில் உள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கூறுக:
![1AgricultureandruralfarmsofIndiaw4311.jpg](https://resources.cdn.yaclass.in/aa404e56-28d0-40d4-9397-6d2d51e95a45/1AgricultureandruralfarmsofIndiaw4311w300.jpg)
நெல் அறுவடை செய்தல்
1. எதற்காக விவசாயிகள் நெல்லை அறுவடை செய்கிறார்கள்?
பிரதான உணவாக இந்தியர்கள் அரிசியை உணவாக உட்கொள்கிறார்கள். தெற்காசியாவில் கணிசமான அளவில் அரிசியை உணவாக உட்கொள்ளப்படுகிறது. இது தினசரி கலோரிகளில் \(50 - 60\)\(%\) வரை அதிகமாக உள்ளது. பெரும்பாலான தென்னிந்தியர்கள் தினசரி மதிய உணவு மற்றும் இரவு உணவு மற்றும் காலை உணவுக்கு கூட நான்கைந்து குவளை அரிசியை உட்கொள்கிறார்கள்.
![Womenatworkinasmallscalecoirspinningunitatkollamw512.jpg](https://resources.cdn.yaclass.in/49e3ee87-cf90-4321-9302-758134d2b954/Womenatworkinasmallscalecoirspinningunitatkollamw512w300.jpg)
கயிறு தயாரிக்கும் பெண்கள்
2. ஒரு பெண்மணி கயிறு திரித்துக் கொண்டிருக்கிறார். அந்த கயிற்றுக்குத் தேவையான மூலப்பொருள் எங்கிருந்து கிடைக்கிறது?
சணல் அல்லது ஆளி உள்ளிட்ட தாவரங்களின் இழைகளிலிருந்து கயிறு தயாரிக்கப்படுகிறது. இது \(10,000\) ஆண்டுகளுக்கு முன்பாகவே நார் திரிக்கப் பயன்பட்ட பயிராக விளங்கியது. மேலும், பல வணிகப் பொருள்களான காகிதம், துணி, உடை, பைகள், எரிபொருள், உணவு, கால்நடைத் தீவனம், காப்பீட்டுப் பொருள்கள் போன்றவை சணலைப் பதப்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
![neemleaves6519131280.jpg](https://resources.cdn.yaclass.in/55a34f54-6fb8-48f7-9eef-ef8f0f7db455/neemleaves6519131280.jpg)
வேம்பு இலைகள்
3. வேப்பமரத்தின் இலைகள் ஒரு தட்டில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. எதற்காக என்று யூகிக்க முடிகிறதா?
வேப்ப மரம் (Azadirachta indica, Neem) இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும் மிகவும் பயனுள்ள மரமாகும். அதன் இலைகள் மருத்துவ பயன்களான விவசாயத்திற்கு பூச்சிக்கொல்லி மருந்தாகவும், கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டதாகவும் மேலும், இது கொசு விரட்டியாகவும் பயன்படுத்தப்படுகின்றன. முக்கியமாக, அதன் விதையிலிருந்து வேப்ப எண்ணெய் தயாரிக்கப்பட்டு மருத்துவ ரீதியாக பயன்படுகிறது.
![37158925023d61ffca735cw797.jpg](https://resources.cdn.yaclass.in/f9349bb5-edff-4fee-b366-8359a3072a52/37158925023d61ffca735cw797w300.jpg)
நாற்காலியைத் தயாரிப்பவர்
4. நாற்காலியைத் தயாரிக்க ஒருவர் எப்பொருளைப் பயன்படுத்துகிறார்?
மரப்பொருட்களைத் தயாரிக்க தாவரங்களிலிருந்து பெறப்பட்ட மரத்தை பயன்படுத்துகிறார். மரம் பலகைகளும் கதவு, ஜன்னல், வீடு கட்ட பயன்படுகின்றன. கட்டுமானப் பொருட்களில் இருந்து வீட்டுத் தேவைகள், அலங்காரப் பொருட்கள் வரை எண்ணற்ற பொருட்கள் மரங்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.
Reference:
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/be/Women_at_work_in_a_small_scale_coir_spinning_unit_at_kollam.jpg/512px-Women_at_work_in_a_small_scale_coir_spinning_unit_at_kollam.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/f/f1/%281%29_Agriculture_and_rural_farms_of_India.jpg
https://www.flickr.com/photos/cifor/37158925023
https://upload.wikimedia.org/wikipedia/commons/f/f1/%281%29_Agriculture_and_rural_farms_of_India.jpg
https://www.flickr.com/photos/cifor/37158925023