PDF chapter test TRY NOW
இடம் : மதுரை
நாள் : 12-05-2017
வணக்கம். நான்நலம். நீங்கள் நலமா? என் பள்ளிப் பருவக் கனவு நனவாகி விட்டது. ஆம் அத்தை. இளம் அறிவியல் ஆய்வாளர் பணிக்கு நான் தெரிவு செய்யப்பட்டிருக்கிறேன். நாளை காலை சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் பணியில் சேரவேண்டும். இந்த மகிழ்ச்சியான நேரத்தில் உங்களைத்தான் நினைத்துக் கொள்கிறேன். நான் ஆறாம் வகுப்பு படித்தபோது உங்களுக்கு ஒரு கடிதம் எழுதினேனே! நினைவிருக்கிறதா?
அதன் பிறகு நீங்கள் எனக்குத் தொடர்ந்து பல கடிதங்கள் எழுதினீர்கள். செய்திகள் பலவற்றைக் கூறி ஊக்கம் அளித்துக்கொண்டே இருந்தீர்கள். என் ஐயங்கள் எல்லாவற்றையும் தீர்த்து வைத்தீர்கள். என் கனவுகளுக்கு உரம் ஊட்டியவை உங்களின் கடிதங்களே! அக்கடிதங்களை அறிவுக் கருவூலங்களாக இன்றும் பாதுகாத்து வருகிறேன். என்னுடைய உயர்வுக்குக் காரணமான அவற்றை மீண்டும் மீண்டும் படித்துப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது.
கனவு பலித்தது பாட பொருண்மையானது கடிதப் போக்குவரத்தின் வாயிலாக, நிகழ் காலத்தில் கடந்த கால கடிதப் போக்குவரத்தினை நினைவுகூா்ந்து பின் மீண்டும் நிகழ்காலத்திற்கு வந்தடைவது போலக் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு மையம்:
|
கனவு பலித்ததும் கடித போக்குவரத்தும்:
|
அவள் எழுதிய கடிதத்திற்கு மறுமடலைத் தொடர்ந்து பல்வேறு கடிதங்களை எழுதுகிறாள் அத்தை நறுமுகை. இக்கடிதங்களைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அதனை வாசித்து வாசித்து தன்னை வளர்த்துக் கொள்கிறாள். அவளது வளர்ச்சிக்கு கடுமையான உழைப்பும் அத்தையின் கடிதங்களும் தான்.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திருத்திய பதிப்பு(2020). ஆறாம் வகுப்பு முதல் பருவம். மொழி - கனவுபலித்தது (ப.எண்.15-17) தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்டது.