PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நீர்  என்பது நிறமற்ற, சுவையற்ற, மணமற்ற மற்றும்  ஒளிபுகும் தன்மை கொண்ட  ஒரு வேதிப்பொருளாகும்.
நீரின் மூலக்கூறில் இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள், ஓர் ஆக்ஸிஜன் அணுவோடு 2:1 என்ற விகிதத்தில் இணைந்து உருவாகிறது. நீரின் மூலக்கூறு வாய்ப்பாடு H_2O ஆகும்.
 
YCEditorialDrawingsfortheexercises20w959pngw956.png
 
நீரின் இயைபு (அ) தன்மை
  
நீரின் புற இயைபு இடத்திற்கு இடம் மாறுபடுகிறது அவற்றைப் பின்வருமாறு,
  • நீர் சில இடங்களில் தெளிவாகவும்
  • நீர் சில இடங்களில் கலங்கிய நிலையிலும்
  • நீர் சில இடங்களில் ஆக்ஸிஜன் குறைந்தும்
  • நீர் சில இடங்களில் ஆக்ஸிஜன் அதிகாரித்தும்
  • நீர் சில இடங்களில் நன்னீராகவும்
  • நீர் சில இடங்களில் உவர்ப்பாகவும் காணப்படும்
நீரின் வகைகள்
 
நீரில் கலந்துள்ள உப்பின் அளவினைப் பொறுத்து, நீரானது மூன்று முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம் அவை பின்வருமாறு,
  1. நன்னீர்
  2. உவர்ப்பு நீர் 
  3. கடல் நீர் 
நீரில் கலந்துள்ள உப்பின் அளவு
  • நன்னீரில் - 0.05%முதல்  1%  வரை உப்புக்கள் கரைந்திருக்கும். 
  • உவர்ப்பு நீரில் - 1% முதல்   3%  வரை உப்புக்கள் கரைந்திருக்கும். 
  • கடல் நீரில்3% மேல் உப்புக்கள் கரைந்திருக்கும். 
கடல் நீரானது அதிகளவு கரைபொருள்களைக் கொண்டுள்ளது.
 
கடல் நீரில் கரைந்துள்ள உப்புக்கள், அவை
  1. சோடியம் குளோரைடு
  2. மெக்னீசியம் குளோரைடு 
  3. கால்சியம் குளோரைடு
குறிப்பு:
 
பொதுவான வளிமண்டல அழுத்தத்தில் நீரின் உறைநிலை   செல்சியஸ் ஆகும். மார்ச் 22 ஆம் தேதி உலக நீர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.