PDF chapter test TRY NOW

ஒரு கோட்டுத்துண்டிற்கு இரண்டு முனைப்புள்ளிகள் இருக்கும். கோட்டுத்துண்டை இரண்டு வழிகளில் நாம் வரையலாம்.
 
(i) அளவுகோலைப் பயன்படுத்தி வரைதல்.
 
(ii) அளவுகோல் மற்றும் கவராயத்தைப்(compass) பயன்படுத்தி வரைதல்.
அளவுகோலைப் பயன்படுத்தி கோட்டுத்துண்டு வரைதல்:
அளவுகோலைப் பயன்படுத்தி 5.5 \ \text {செ.மீ.} நீளமுடைய கோட்டுத்துண்டு வரைக.
 
Scale (1).gif
 
படி 1: அளவுகோலை ஒரு தாளில் வைக்கவும்.
  
படி 1: அளவுகோளில் 0 என குறிக்கப்பட்ட ஒரு முனையை A என குறிக்கவும்.
 
படி 2: இப்பொழுது அளவுகோளில் 5 \text {செ.மீ.} க்கு அடுத்து உள்ள 5 சிறுகோடுகளை எண்ணவும். அப்புள்ளிக்கு B என பெயரிடவும்.
 
படி 3: இதுவே தேவையான கோட்டுத்துண்டு AB = 5.5 \ \text {செ.மீ.} ஆகும்.
அளவுகோல் மற்றும் கவராயத்தைப்(compass) பயன்படுத்தி கோட்டுத்துண்டு வரைதல்.
அளவுகோல் மற்றும் கவராயத்தைப் பயன்படுத்தி AB = 5 \ \text {செ.மீ.} நீளமுடைய கோட்டுத்துண்டை வரைக.
 
படி 1: அளவுகோலை ஒரு தாளில் வைக்கவும்.
 
ruler2w899png.png
 
படி 2: ஒரு நீளமான கோட்டினை வரையவும்.
 
measure11w895png.png
 
படி 3: கவராயத்தின் உலோக முனையை 0 விலும் மற்றும் எழுதுகோல் முனையை 5 \ \text {செ.மீட்டரிலும்} அளவுகோலின் மேல் வைக்கவும்.
 
measure2w899png.png
 
படி 4: இப்பொழுது, கவராயத்தின் அளவை மாற்றாமல் அப்படியே கோட்டின் மீது வைத்து ஒரு வில் வரையவும்.
 
measure31png.png
 
படி 5: கவராயத்தின் உலோக முனையை கோட்டின் மீது வைத்த இடத்தை A என்றும், வில் வெட்டிய இடத்தை B என்றும் பெயரிடுக.
 
draw1w804png.pngs
 
இங்கு, AB = 5 \ \text {செ.மீ.} என்பது தேவையான கோட்டுத்துண்டு ஆகும்.